இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

முதன்முறையாக டீசல், பெற்றோல் மீது VAT விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதுள்ள 15% வாட் வரியை ஜனவரி 1 ஆம் தேதி முதல் 18% ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)