இந்தியா

பெங்களூரில் மன உளைச்சல் காரணமாக கல்லூரி மாணவி எடுத்த விபதீர முடிவு..!

பெங்களூருவில் 13வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நாகரபாவி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (17). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 2 வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு, விஜயலட்சுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். பின்பு, வீட்டில் உள்ளவர்கள் அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர், பொலிஸார் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தர்மஸ்தலாவுக்கு சென்று, நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமியை வயதானவர் ஒருவர் மீட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு பொலிஸார் விஜயலட்சுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு, 13வது மாடியின் மேலிருந்து கீழே குதித்துள்ளார்.விஜயலட்சுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்பு, இதுகுறித்து பேடராயனபுரா பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content