ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறைவடைந்த கொலைகள்

பிரான்ஸில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே இடம்பெறும் படுகொலைகள் குறைவடைந்துள்ளது.

கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் கூடாரமாக விளங்கும் மார்செ நகரிலேயே இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் மார்செயில் 5 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

அனைத்து கொலைகளும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகும்.

அதேவேளை, சென்ற வருடம் முதல் ஆறு மாதங்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் 70% சதவீத வீழ்ச்சியாகும்

அதேவேளை, கொலை முயற்சியும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆறு மாதத்தில் 19 முயற்சிகளும், சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 46 முயற்சிகளும் பதிவாகியிருந்தன.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்