இந்தோனேசியாவில் நிலத்தடியில் மறைந்திருக்கும் பேரழிவு ஆபத்து!
இந்தோனேசிய தலைநகரம் ஜகார்த்தாவின் நிலத்தடியில் பாரிய பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அபாயம் குறித்து ஏற்கனவே குறைத்து மதிப்பிடப்பட்டிருந்ததாக, பிரித்தானிய புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தூண்டும் திறன் கொண்ட ஒரு டெக்டோனிக் பிழையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெக்டோனிக் என்பது புவியின் பாறை ஓடு பெரிய துண்டுகளாக உடைந்து நகரும் செயல்முறையைக் குறிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய ஜகார்த்தா நகரின் தெற்குப் பகுதியில் ஆபத்தான பிளவைக் கண்டறிந்துள்ளதாக ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் வழக்கமான நில அதிர்வு நடவடிக்கைகள் கடற்பரப்பிற்கு அடியில் நிகழும். இந்நிலையில், இந்தப் பிளவு நேரடியாக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகர்ப்புறப் பகுதியின் கீழ் தாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
ஜகார்த்தா போன்ற நெரிசலான மக்கள் தொகை கொண்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால், உயிர்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என, ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிளவு வருடத்திற்கு சுமார் 3.2 மில்லிமீட்டர் வேகத்தில் நகர்கிறது, ஆனால் குறைந்தது 7.2 கிலோமீட்டர் ஆழத்தில் பூட்டப்பட்டுள்ளது.
இந்த நகர்வு செயற்பாடு 210 ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு செயல்முறையாகும் என ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





