இந்தியா

இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த கார்… கூகுள் மேப்பால் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்!

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கார், குருப்பந்தரா அருகே ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலாவுக்கு காரில் கேரளா வந்தனர். இவர்கள் நேற்று இரவு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த சாலை, கனமழை காரணமாக வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழி தெரியாததால், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்றனர்.

குருப்பந்தாரா பகுதியில் சென்றபோது, தவறுதலாக வழி மாறி, கார் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியது. இதையடுத்து அப்பகுதியினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 4 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வந்த கார் நீரில் மூழ்கி விட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக காடுதுருத்தி காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது நீரில் மூழ்கிய காரை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!