பாகிஸ்தானில் செங்குத்தாக பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து : 28 பேர் ஸ்தலத்தில் பலி!
தென்மேற்கு பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதில் பேருந்தில் பயணித்த 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு படையினர் விரைந்து செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)





