ஆசியா

பாகிஸ்தானில் பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளான பேருந்து – 12 பேர் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கிழக்கு நகரமான லாகூர் நோக்கிப் பயணித்த பேருந்து, உப்பு மலைத்தொடர் பகுதியில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 07  பேர்  வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 8 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

பாக்கிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை, என்றாலும், தரமற்ற பாதை அமைப்புகளால் அடிக்கடி விபத்துகள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!