இலங்கை செய்தி

ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி துப்பாக்கி துளைக்காத கார்

நிறைவேற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அவசர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திடீரென மக்கள் மத்தியில் தோன்றும் மக்களின் அருகில் சென்று உரையாடும் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து அவரது பாதுகாப்பு பிரிவு கட்சியின் முக்கியஸ்தர்கள் அபிமானிகள் உட்பட பொது மக்களிடம் இருந்தும் பரவலான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவர் பயணிக்கும் வாகனத்துடன் சில பொலீஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்துடன் பயணிக்கும் பாதுகாப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கே உரிய அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு முறை இருக்கையில் இவ்வாறு பாதுகாப்பின்றி நாட்டின் ஜனாதிபதி வீதிகளிலும் வைப்பவங்களிலும் கலந்து கொள்வது அவரது பாதுகாப்பை கேள்வி குறியாக்கு விடும் என பாதுகாப்பு அதிகாரிகளும் ஜனாதிபதியை அறிவுறுத்தியுள்ளனர்

இவ்விடயத்தில் அவரது எதிர்ப்பையும் மீறி அவருக்கு துப்பாக்கித் துளைக்காத BMW கார் முன்னாள் (கோட்டாபய ராஜபக்ஷ) பயன்படுத்தியது மற்றும் ஜனாதிபதிக்கு உரிய STF பாதுகாப்பு அதிரடிப்படை வலையமைப்பும் அவரின் பாதுகாப்புக்கு வழங்க தீர்மானித்ததாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!