ஐரோப்பா

உக்ரைன் போர் களத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழப்பு!

உக்ரைனில் பணியில் இருந்த பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்பதாம் திகதி  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கார்போரல் ஜார்ஜ் ஹூலி  (Lance Corporal George Hooley) என்ற 28 வயதுடைய வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவம் புதிய ஆயுதத்தை சோதனை செய்துகொண்டிருந்தபோது, நடந்த “துரதிர்ஷ்டவசமான விபத்தில்” அவர் உயிரிழந்ததாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக ஹூலியின் துணிச்சலையும், நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையையும் எடுத்துரைத்த பிரித்தானிய பிரதமர் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!