ஐரோப்பா

அழகுப்பொருளாக கருதி வீட்டுத்தோட்டத்தில் பிரித்தானிய தம்பதியர் வைத்திருந்த பொருள்: பொலிசார் குவிந்ததால் பரபரப்பு!

அழகுப் பொருளாக கருதி, ஒரு பிரித்தானியத் தம்பதியர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பொருளை பத்திரமாக வைத்திருந்தார்கள்.ஆனால், திடீரென பொலிஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வீட்டை சுற்றிவளைக்க, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள் அவர்கள்.

வேல்ஸிலுள்ள Pembrokeshire என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த Sian மற்றும் Jeffrey Edwards (77) என்னும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டுத் தோட்டத்தில், நீண்ட காலமாக, வெடிக்காத ஒரு வெடிகுண்டை அழகுப்பொருள் போல பத்திரமான வைத்திருந்திருக்கிறார்கள்.ஆனால், கடந்த புதன்கிழமை திடீரென பொலிசார் ஒருவர் வந்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். தம்பதியர் நினைப்பது போல அது அழகுப் பொருள் அல்ல, ஆபத்தான 19ஆம் நூற்றாண்டு கால வெடிகுண்டு என்று அவர் கூற, அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் தம்பதியர்.

சிறிது நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து, அந்த வெடிகுண்டை பத்திரமாக எடுத்துச் சென்று, குவாரி ஒன்றில் வைத்து, மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்துள்ளார்கள்.விடயம் என்னவென்றால், Sian தோட்ட வேலை முடிந்ததும், அந்த வெடிகுண்டின் மீது படிந்துள்ள மண்ணை டவலால் ஒரு அடி அடித்து சுத்தம் செய்வாராம்.

ஏதோ அதிர்ஷ்டம்தான் அந்த வெடிகுண்டு வெடிக்காமல் இருந்துள்ளது. தாங்கள் நீண்ட காலமாக அந்த வெடிகுண்டை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்திருந்ததாகவும், அதை ஒரு நண்பன் போல கருதி தாங்கள் பத்திரமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள் தம்பதியர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!