பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வெடித்த குண்டு : 24 பேர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று (9) காலை வெடிகுண்டு வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக நாட்டின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)