இலங்கை

நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும் ஒரு தொகை உப்பு!

தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட உப்பளங்களில் போதிய உற்பத்தியைப் பெற முடியாததால், நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு கிலோ உப்பின் விலை 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புத்தளம் உப்பு நிறுவனத்தைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி நேற்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்