இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது 50 கிரேம் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளனர்.

மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 50 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தலைமன்னார்- கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் PC 99067 எம்.அபிமன் (27வயது) எனவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)
See also  இலங்கையில் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரணில் - சஜித்! நீடிக்கும் இழுபறி
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content