யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 29 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இந்தநிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)