இந்தியா

டெல்லியில்(Delhi) 20 வயது பெண் ஒருவர் காதலனால் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு டெல்லியின் நந்த் நக்ரி(Nand Nagri) பகுதியில், 20 வயதுடைய பெண் ஒருவர், அவரது காதலனால் இன்று காலை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நந்த் நக்ரியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகம் கொண்டதால் காதலன் அந்தப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.சண்டையின் முடிவில் அவர் கத்தியால் பலமுறை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விசாரணையில், குறித்த இளைஞரும் பெண்ணும் ஒரே பகுதியில் வசித்துவந்தவர்கள் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களிடையே காதல் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.

அண்மையில் அந்தப் பெண் விலகிச் செல்ல ஆரம்பித்ததே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே