இலங்கை

இலங்கையில் 17 வயதான பாடசாலை மாணவன் அடித்துக் கொலை

மஹவெல பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இரும்பு கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களை பயன்படுத்திய சிலரால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் மஹவெல பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மஹாவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!