இலங்கை செய்தி

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி மாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (15) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மகளூர் முதலாம் பிரிவு நீலகிரி வீதியைச் சேர்ந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், அதனால் தங்களை பார்க முடியாத நிலையில் இருப்பதாகவும் என்னை பார்கக் கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாகவும் கடிதம் ஒன்றை சம்பவதினமான நேற்று எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை மேசன் தொழில் செய்துவருவதாகவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்து சென்றுள்ளதாகவும், சிறுமியும் அவருடன் சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாகவும், பெற்றோர் கஸ்டப்பட்டு வருவதாகவும் தந்தையாரின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது

காணாமல் போன சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை