இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் துணிக்கடைக்குள் புகுந்த 14 அடி மலைப்பாம்பு: தப்பியோட்டம் பிடித்த ஊழியர்கள்!(வீடியோ)

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 அடி நீள மலைப்பாம்பு மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் உள்ள துணிக்கடைக்குள் புகுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள பேகம்பூரில் லால்குர்தி பீத் மார்க்கெட் உள்ளது. இங்கு ராமா சூட்ஸ் என்ற துணிக்கடை உள்ளது. இந்த கடையில் உள்ள துணி ரேக்கில் மலைப்பாம்பு நெளிவதை கேமிராவில் பார்த்த கடை உரிமையாளர், ஊழியர்கள் பீதியடைந்தனர். இதனால் கடையில் இருந்து அனைவரும் வெளியே ஓடினர். இதுகுறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த துணிக்கடை முன்பு குவிந்தனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த பொலிஸார்,பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதன்பின் மலைப்பாம்பை போராடிப் பிடித்தனர்.

அந்த பாம்பு 12 அடி முதல் 14 அடி இருந்ததாக வனத்துறையினர் கூறினர். அத்துடன் இந்த மலைப்பாம்பு அபு நாலாவிலிருந்து கடைக்குள் வந்திருக்கலாம் என்ற வனத்துறையினர், பத்திரமாக பாம்பு காட்டுக்குள் விடப்பட்டதாக கூறினர். துணிக்கடைக்குள் மலைப்பாம்பு நுழைந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1732049466134335999

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!