செய்தி

ஜெர்மனி வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயல் – 735000 யூரோ திருட்டு

ஜெர்மனி வங்கியில் பணியாற்றிய இளம் பணியாளர் ஒருவர் பல லட்சம் யூரோக்களை சூறையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயன் மாநிலத்தில் உள்ள ஃவெல்க் எக்கிரஸ் என்று சொல்லப்படுகின்ற ஒரு பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வேலைக்கு சேர்ந்த குறுகிய காலங்களில் 735000 யுரோக்களை வங்கியில் இருந்து திருடியதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் விசாரணைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இவர் ஜெர்மனியின் மத்திய வங்கியின் பணத்துக்கு ஏற்கனவு நியமனம் கொடுத்ததாகவும், இந்த பணம் வந்த பிறகு இந்தபணத்தை பதுகாப்பான இடத்தில் வைக்காமல் திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளையில் தற்பொழுது இந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்,

இந்த வழக்கு விசாரணையில் இந்த நபரானவர் குற்றவாளியாக பார்க்கப்படும் பட்சத்தில் இளைஞர்களுக்கான சட்டத்தின் படி இவருக்கு அதி கூடிய தண்டனையாக 6 வருட சிறை தண்டனை எதிர்பார்க்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!