இலங்கை செய்தி

சிகிச்சைக்கு பணம் இல்லை!! கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

சூரியவெவ பிரதேசத்தில் கணவன்-மனைவி தம்பதியொருவர் மனைவியின் சுகயீனத்திற்கு சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தினால் கடந்த (04) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சூரியவெவ வெனிவேலில் வசிக்கும் 58 வயது மற்றும் 54 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதுகுத்தண்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மனைவி நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று மனைவிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், வாழக் கூட பண வசதி இல்லாததாலும், மனைவிக்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததாலும் கணவனும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!