ஐரோப்பா

சிங்கப்பூரில் தாய்க்கு மகன் செய்த அதிர்ச்சி செயல்

சிங்கப்பூரில் தூங்கிக்கொண்டிருந்த தாயைத் தலையணையை வைத்துக் கொல்ல முயன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிராங்கூன் செண்ட்ரலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. யோங்கிற்கு 34 வயது. அவரின் தாய்க்கு வயது 77ஆகும்.

அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றும் தமது தாயைப் பார்க்க விரும்புவதாகவும் யோங் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவர் சாங்கிச் சிறைச் சாலையில் இருந்தபடி நீதிமன்றத்தில் தோன்றினார். அவரை மனநலச் சோதனைக்காகத் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

யோங் தாயாரின் நிலைமை என்ன என்று நீதிபதி கேட்டார். அதற்குப் பதில் அளித்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், யோங்கின் தாய் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று நம்புவதாகக் கூறினார்.

ஜனவரி 16ஆம் திகதி தாயார் தூங்கிக்கொண்டிருந்தபோது யோங் அவரின் முகத்தின்மீது தலையணையை அழுத்திக் கொல்ல முயன்றதாகக் குற்றச்சாட்டு சொல்கிறது. அது குறித்து ஜனவரி 18ஆம் திகதி பொலிஸாருக்கு புகார் கிடைத்தது.

யோங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம், அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படிகளும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!