தாய்லாந்தில் மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் புதிய வைரஸ்

தாய்லாந்தில் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது வௌவால்களால் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய வைரஸ் என கூறப்படுகின்றது.
தாய்லாந்து விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு உரமிடுவதற்காக வவ்வால்களின் மலத்தை சேகரிக்கும் குகையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கில் உள்ள அரசு சாரா சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் பீட்டர் தசாக், உலக சுகாதார நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வுஹானில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவால் தொடர்புடைய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)