ஐரோப்பா

பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல் புரளி – சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்து

பிரான்ஸின் Lille நகரில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த Flixbus பயணிகள் பேருந்து ஒன்று இடைமறிக்கப்பட்டுச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பயணிகள் மூவர் விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் என்று பயணி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே பெல்ஜியம் பொலிஸார் வெற்றரன் (Wetteren) என்ற இடத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்துப் பயணிகள் அனைவரையும் வெளியேற்றிச் சோதனை நடத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் பற்றிய தகவலைச் சக பயணிகள் சிலரது உரையாடலின் மூலமே தான் அறிந்து கொண்டதாக பிரஸ்தாப பயணி கூறியதை அடுத்தே பொலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் அச்சுறுத்தலின் உண்மைத் தன்மை உடனடியாக உறுதிப்படுத்தப் படவில்லை என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவித்தது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content