ஐரோப்பா

இஸ்ரேல் -ஹமாஸ் போர் : பாரிஸில் ஒன்றுக்கூடிய 20இற்கும் மேற்பட்ட நாடுகள்!

இஸ்ரேல் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாரிஸில் ஒன்றுக்கூடி ஹமாஸின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஆனால் இந்த கூட்டத்தில் அரபு நாடுகள் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்டோபர் 07 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு, பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவிற்கு  எதிராக ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டுவர ஜேர்மனி மற்றும் இத்தாலியுடன் இணைந்து பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பிரெஞ்சு இராஜதந்திரிகள் முடிந்தவரை பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த மூலோபாயத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையிலேயே மேற்படி 20இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுக்கூடியுள்ளன.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!