ஆஸ்திரேலியா செய்தி

விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டிற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள குடியேற்ற அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாட்டிற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 250,000 ஆக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் மீது கடுமையான விசா முறை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கையின்படி, வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் தேர்வுக்கு உயர் தரவரிசையை எட்ட வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கடந்த ஒரு வருடத்தில் 10,000 பேர் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி