உலகம் செய்தி

விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ்

ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர்.

இந்த போர் நிறுத்தம் நான்கு நாள் போர் நிறுத்தமாக கடந்த 24ம் திகதி தொடங்கியது.

அதன்பிறகு, இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததன் விளைவாக, போர் நிறுத்தம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தது கத்தார் தான்.

எனினும், ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் போர் நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளை மீறிய செயல் என்றும், காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!