ஐரோப்பா செய்தி

தொடர் போராட்டங்களுக்கு தயாராகின்றனர் ஜேர்மனிய தொழிற்சங்கங்கள்

ஜெர்மனியின் அனைத்து வகை போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி  பெரும் எழுச்சியுடன் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்

அமெரிக்காவின் ஆணைப்படி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் விசுவாசமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

எனினும் இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களில் முதன்முறையாகத் தொழிற்சங்கங்கள் ஈடுபடவில்லை.

மார்ச் முதல் வாரத்தில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சுமார் 350 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது அனைத்துப் போக்குவரத்துத் துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்

உக்ரைன்- ரஷ்யா நெருக்கடிக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!