இலங்கை செய்தி

குவைத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள்

விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைதது வரப்பட்டனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வரவிருப்பதாகவும், எஞ்சிய குழுவும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறவும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரத்து செய்யவும் முயற்சி செய்துள்ளனர்.

அத்துடன், இந்த இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்குத் தேவையான விமானச் சீட்டுக்களை வழங்க குவைத் மாநிலத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content