ஐரோப்பா

அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை எதிர்த்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கடந்த 1996-ம் ஆண்டு ரஷ்யா-அமெரிக்கா இடையே பனிப்போர் மூண்ட காலத்தில் உலக அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (சி.டி.பி.டி) கையெழுத்திடப்பட்டு உலகநாடுகள் கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி உலகநாடுகள் அணு ஆயுத சோதனையில் ஈடுபட கூடாது என கூறப்பட்டு வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து வருவதாக கூறப்பட்டாலும் சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை எதிர்த்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரு அவைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது இறுதி ஒப்புதலுக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறுகையில், “உலகளாவிய அணுசக்தி சோதனை தடையை ரஷ்யா மதிக்கும். அணுசக்தி சோதனையில் அமெரிக்கா ஈடுபட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா தயாராகவும் இருக்கும்” என்றார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்