இலங்கை

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் ;7 வீடுகள் சேதம்

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் இன்று அதிகாலை (21) சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது கிராமத்தை அண்டிய பகுதியில் யானையின் சரணாலயம் அமைந்துள்ளதாகவும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் அனைத்தும் இங்கே விடப்பட்டுள்ளதாகவும், குறித்த யானைகள்
கிராமத்துக்குள் உள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

நேற்றிரவு முதல் இன்று (21) அதிகாலை வரைக்கும் ஏழு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டுத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள கத்தரி, மிளகாய், மரவள்ளி,வாழை மரம் போன்ற மரங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

யானைகளினால் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் உடனடியாக உடைந்த வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல் அதிகரித்து வருகின்றமையால் யானை மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!