இலங்கை

இலங்கையில் முழு அளவில் சமூக வலைத்தள பாவனையை தடைசெய்யப்படாது

வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீனாவைப் போன்று சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்பது எமது இலக்கல்ல. போலி தகவல்கள் மற்றும் செய்திகளை பரப்புவதன் ஊடாக இன, மத மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தின் ஊடாக சமூக வலைத்தள ஊடகங்களை முடக்க எதிர்பார்க்கவில்லை. போலி தகவல்கள் அல்லது செய்திகள் பகிரப்படுதல், ஏனைய குற்றச்செயல்களை தடுப்பதற்காகவே இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அபிவிருத்தியடைந்த சீனா போன்ற நாடுகளில் எவ்வித சமூக வலைத்தளங்களும் பாவிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு தடையை விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.

இன, மத ரீதியான மோதல்களையும் வன்முறைகளையும் தூண்டக் கூடிய, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content