இந்தியா

வரும் அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள 15 புதிய விதிமுறைகள்

இந்தியா முழுவதும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

*செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் உங்களது கணக்குகள் முடக்கப்படும்.

*2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில்TCS கட்டணங்களை 5% இலிருந்து 25% ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

* வெளிநாடுகளுக்கு பயணம் செல்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தால் 20% வரி செலுத்த வேண்டும். ரூ.7 லட்சத்திற்கு குறைவாக செலவு செய்தால் 5% செலுத்த வேண்டும்.

*வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சம் மேல் கடன் பெற்றால் 0.5% குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும். மருத்துவம் மற்றும் கல்வி செலவு ஏற்பட்டால் டி.சி.எஸ். 5% வசூல் செய்யப்படும்.

* டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி ஒருவரின் பெயரை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.

Rupee falls 15 paise against US dollar amid global currency turmoil | Mint

* பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்தவர்கள் தங்களுடைய கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் இணைக்க வேண்டும்.

* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் அதனை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

* தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த, காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மாற்றியமைத்த அட்டவணையை அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பின்பற்ற வேண்டும்.

* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் சொத்துக்கள் குறித்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

How To Apply For Aadhar Card Or UIDAI Card, Here's Step-By-Step Guide

* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023 அமலுக்கு வரப்போகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேர்வதற்கு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

* மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content