இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன காயம் காரணமாக அணியில் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)