இலங்கை செய்தி

யாழ் கல்வியங்காடு படுகொலை – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட நபர் அடித்து கொலை செய்யப்படுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

09 வயதான சிறுமி ஒருவரிடம் சடலமாக மீட்கப்பட்டநபர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்களே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் தாய் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

உயிரிழந்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தினால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியிடமும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்கள் மற்றும் சிறுமியும்
யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆயற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 6 பேரையும் எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன்

குறித்த சிறுமியை தந்தையுடன் செல்ல நீதவான் அனுமதித்தார்.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!