இலங்கை செய்தி

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சடலங்களை தகனம் செய்ய அறிவுறுத்திய அதிகாரிகள் மீது வழக்கு

கோவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யுமாறு பணிப்புரை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்த போதிலும், தகனம் செய்வதன் மூலம் இலங்கை ஒரு வெறுப்புக் குற்றத்தை இழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இதன் விளைவாக, கோவிட் தொற்றினால் தகனம் செய்யப்பட்ட ஒரு குழுவினரின் உறவினர்கள் பலர் முஸ்லிம் மக்களுக்கு அடக்குமுறையை ஏற்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கை - புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை : அதிர்ச்சியில் மத்திய வங்கியின் ஆளுநர்கள்!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content