ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் வேலையிடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துக்கள் ஊழியர்களின் உயிரை பறிப்பதோடு, அவர்களின் குடும்பங்களையும் நிலைகுலைய செய்கின்றதனை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்துகளுக்கு முக்கிய காரணமாக பாதுகாப்பற்ற வேலையிடங்கள் உள்ளதாக நிபுணர்களால் கூறுகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்து தெரிந்தும் அதனை கூறினால் தொழிலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஊழியர்கள் பலர் உள்ளனர்.

அதற்கமைய, இனி தைரியமாக முறைப்பாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கிறது.

SnapSAFEஐப் பயன்படுத்தி மனிதவள அமைச்சகத்திடம் நேரடியாக புகாரளிக்கலாம். இது மிக விரைவான மற்றும் எளிதான முறை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சூழலை கொண்ட வேலையிடங்கள் குறித்த விவரங்களை கொடுத்தால் மட்டும் போதும். உங்கள் அடையாளம் மற்றும் தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்பதை MOM உறுதிப்படுத்தியுள்ளது.

“வேலையிடங்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று MOM கூறியுள்ளது.

(Visited 15 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content