இலங்கை

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!

பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இன்று (22) துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி வீட்டின் வாயிலை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடு பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனருக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!