இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அல்லிராஜா சுபாஸ்கரன்: கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லைக்கா (Lyca) குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம் (19) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இச் சந்திப்பு தொடர்பில் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அல்லிராஜா சுபாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சாதகமான நிலை ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிலும் இலங்கையிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரியுள்ளார்.

முதலீடுகளுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் விரைவில் அதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!