ஐரோப்பா

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுவாயுதங்களை விட சக்தி வாய்ந்த அணுவாயுதங்களை பெற்றுள்ளதாக பெலாரஸ் அறிவிப்பு!

பெலாரஸ் ரஷ்யாவிடம் இருந்து தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ  தெரிவித்துள்ளார்.

குறித்த அணுவாயுதங்கள் 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்தவை என்றும்  அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,   ரஷ்ய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு “எல்லாம் தயாராக உள்ளது” என்றும் கேட்டதை விட அதிகமாக பெறுவதற்கு சில காலங்கள் எடுக்கும் என்றும் கூறினார்.

பெலாரஸ் ஏற்கனவே சில ஆயுதங்களைப் பெற்றுள்ளதா என ரஷ்ய செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்தும் இல்லை, சிறிது சிறிதாக” பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்