இலங்கை செய்தி

இலங்கையில் மொத்த டெங்கு நோயாளர்களில் 25% பாடசாலை மாணவர்கள் – சுகாதார அதிகாரிகள்

இலங்கையின் மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 25% பேர் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஊடாக டெங்கு பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என NDCU இன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன வலியுறுத்தினார். நாட்டில் கடந்த சில மாதங்களில் 42,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மொத்த டெங்கு நோயாளர்களில் 50% பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள ஆண்டாக இந்த வருடம் அமையும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலை மேலும் மோசமடைந்து பாரியளவில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டொக்டர். ஹரித அலுத்கே, மொத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 20% டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக இதுவரை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கண்டி, புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான அளவு டெங்கு பரவல் காணப்படுகின்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை