ஆசியா இந்தியா

பாக்கிஸ்தனின் வான் பரப்புக்குள் நுழைந்த இந்திய விமானம்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான விமான போக்குவரத்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இரு நாடுகளும் தங்கள் வான்பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் இண்டிகோ விமானம் நேற்று இரவு பாகிஸ்தான் வான் எல்லைகுள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி நேற்று இரவு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் நுழைந்தது.

இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் வடக்கு லாகூர் வான்பரப்பில் நுழைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இண்டிகோ விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளது. பின்னர், மீண்டும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்து அகமதாபாத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)
See also  ஈரானில் விஷ சாராயம் அருந்தியதில் 26 பேர் உயிரிழப்பு
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content