“மோசடிகளை திசை திருப்பவே ராஜபக்ச குடும்பம் இலக்கு வைப்பு”
“ எனது குடும்பத்தை இலக்கு வைத்து தனது ஆட்சியில் அரங்கேறும் மோசடிகளை திசை திருப்பலாம் என NPP அரசாங்கம் கருதுமானால் அது ஒருபோதும் நடக்காது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (31) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுச்சி பெற்றது. அடுத்த தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றிநடை போடும்.
ஏனெனில் பொய்களை மட்டும்கூறி தொடர்ந்து நாட்டை ஆள முடியாது. யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். எனவே, தேர்தலொன்று நடைபெற்றால் உண்மை தெரியவரும்.
என்னையும், எனது தாயையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
எம்மை விசாரணைக்கு அழைத்து தமது மோசடிகளை திசைதிருப்பலாம் என அரசாங்கம் கருதுகின்றது போலும்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி, கொள்கலன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இடம்பெற்றுள்ள தவறுகளை திசை திருப்ப முடியாது. அரசாங்கம் பொறுப்புகூறியே ஆகவேண்டும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.





