இலங்கை செய்தி

3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு FCID அறிவுறுத்து!

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID எதிர்வரும் 03 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

ஜனவரி 27 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு, இரு வார கால அவகாசம் கோரி இருந்தார்.

எனினும், அவரை 3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே ஷிரந்தி அழைக்கப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!