இலங்கை செய்தி

வவுனியாவிலிருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்து சேவை ஆரம்பம்

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசு பேருந்து சேவை இலங்கை போக்குவரத்துச்சபையால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.

வவுனியா வீதிக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் வீதிக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா வீதியின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!