ஐரோப்பா

முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக வந்த ஈரான் – கவலையில் ஜெலென்ஸ்கி!

அமெரிக்கா தற்போது ஈரான் மீது கவனம் செலுத்தி வருவதால், உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Zelenskyy) இன்று  கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் உக்ரைன்,  அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் தனது முத்தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர திட்டமிட்டிருந்தது.

ஆனால் அமெரிக்கா ஈரான் மீது கவனம் செலுத்துவதால் இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ரொய்டர்ஸ் செய்திக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் ஒப்புக்கொண்ட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியம்.  ஏனென்றால் அனைவரின் கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  ஆனால் திகதி மற்றும் அல்லது இடம் மாறக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் அடுத்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என  அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!