அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சியைக் காக்க கூடிய ஒரே தலைவர் நாமல்: சரத் வீரசேகர புகழாரம்!

“பௌத்த சாசனம்மீது விமர்சனக்கணை தொடுக்கும் NPP அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara. தெரிவித்தார்.

“ எனது நாட்டில் சாசனம் மற்றும் வளங்களை பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டும்.

ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்சதான்.” -எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

தமக்குரிய வாக்கு குறையும் என தெரிந்தும் அவர் அந்த அறிவிப்பை விடுத்தார்.

அப்படியான ஒருவர் ஜனாதிபதியானால்தான் இந்நாட்டையும், சாசனத்தையும் பாதுகாக்க முடியும். பௌத்த பிக்குகளுக்குரிய கௌரவம் மீள கிடைக்கப்பெறும். “ என சரத் வீரசேகர மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!