ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று (29) முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் முன்னெடுள்ளது.
அத்துடன் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரதேச சபைத் தலைவர் எம்.எம்.எம். ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விளக்கினர்.





