இலங்கை செய்தி

முல்லைத்தீவில் 41 வயது நபர் ஒருவர் அடித்து கொலை

முல்லைத்தீவு(Mullaitivu) ஒட்டுசுட்டான்(Ottusuddan) பிரதேசத்தின் கரடிப்புலவு(Karadipulavu) கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த 41 வயது நபர், கடைக்கு சென்று உணவு வாங்கி வந்து கொண்டிருந்த வேளையில் அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபரின் உடல் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!