லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் மரணம்
நாட்டின் தெற்கில் இஸ்ரேலிய(Israel) தாக்குதலில் அல்-மனார்(Al-Manar) தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் தொகுப்பாளர் அலி நூர் அல்-தின்(Ali Nour al-Din) என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான்(Lebanon) ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா(Hezbollah) தெரிவித்துள்ளது.
மரணத்தை உறுதிப்படுத்திய லெபனானின் தகவல் அமைச்சர் பால் மோர்கோஸ்(Paul Morgos), அலி நூர் எல்-தின் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.
அலி நூர் அல்-தின் ஒரு ஹெஸ்பொல்லா போராளி என்றும் அவர் சமீபத்தில் தெற்கு லெபனானில் குழுவின் பீரங்கித் திறன்களை மறுசீரமைக்கப் பணியாற்றினார் என்றும் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலுக்கு பிறகு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அலி நூர் அல்-தின் கொல்லப்படுவதற்கு முன்பு, 2023 முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது ஆறு லெபனான் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.





