அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை.

இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ முதலில் பிரதமருக்கு எதிரான பிரேரணைiயை முன்வைக்கட்டும். கையொப்பம் திரட்டி நாடகம் ஆடுவதுடன் நின்றுவிடாது நடவடிக்கையில் இறங்க வேண்டும்.” – என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என எதிரணி SJP கூறினாலும், கால எல்லை பற்றி கருத்துகூற மறுத்துவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!